மக்கள் நீதி மய்யம் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் விநியோகம்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதல்படி, திரு.வி.க. நகர் தொகுதியில் கோடை வெயிலால் தவிக்கும் மக்களுக்கு நீர் மோர், குளிர்பானங்கள், தர்பூசணி மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.
மாவட்டச் செயலாளர் திரு. V.உதயகுமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் அவர்கள், பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட துணைச் செயலாளர் திரு. சின்னதுரை, கிளைச் செயலாளர் திரு. துரைராஜ் மற்றும் கட்சியினர் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர்கள் திரு. வேலா, திரு. ரவி, வட்டச் செயலாளர்கள் திரு. சக்திவேல், திரு. பிரபாகரன், திரு. மஜித், திரு. கார்த்திக், திரு. சீனிவாசன், கிளைச் செயலாளர்கள் திரு. ஆனந்த், திரு. பாலா, திரு. பன்னீர், திரு. மூர்த்தி, திரு. கண்ணன், திரு. ராஜேந்திரன், திரு. குமார், திரு. மணி, திரு. ராஜு, திரு. மாரி, திரு. ரவி, திரு. மணி, பெரம்பூர் தொகுதி நகரச் செயலாளர் திருமதி. ரேவதி, கிளை செயலாளர் திரு. பத்மநாபன், நம்மவர் தொழிற்சங்க பேரவை மாநில துணை செயலாளர் திரு.யுவராஜ், நிர்வாகி திரு.ராஜபுத்திரன் திரு.திரிஷாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
#KamalHaasan
#MakkalNeedhiMaiam
Social Media Link
Twitter: https://x.com/maiamofficial/status/1917189477568495717
Facebook: https://www.facebook.com/share/p/1RSp4GyCiL/
Instagram: https://www.instagram.com/p/DJB6rCSJzvz/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==